Coimbatore Blog

Coimbatore News




சுப ஹோரை - Subha Horai Tamil

ஹோரை என்றால் என்ன?

Horai in Tamil
ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவன் என்பது சித்தர் வாக்கு. சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிரகப்பிரவேசம், வீடு குடித்தனம் செல்ல, சீமந்தம், பொருள் வாங்க விற்க, பெண் பார்ப்பது, பதவியேற்பது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல், இல்லற சம்பந்தமான காரியங்களை ஜாதகரின் லக்னத்திற்கு, ராசிக்கு அடுத்து சுபஹோரை என்கிற ஒருமணி நேரம் மிக முக்கியமானதாகும்.

ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் கிரகங்கள். ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட நேரம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசையாக மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே ஹோரை நேரங்கள் வரும்.
காலையில் சூரிய உதயம் முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஹோரை தொடங்கும்.
ஞாயிற்றுக் கிழமையை எடுத்துக் கொண்டால் அந்த நாளில் சூரிய ஹோரை காலை 6 - 7 என அந்த நாள் ஆரம்பமாகும்.
இதே போல் திங்கட் கிழமையில் சந்திர ஹோரையும், செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரையும், புதனன்று புதன் ஹோரை, வியாழனன்று குரு ஹோரை, வெள்ளியன்று சுக்கிர ஹோரை, சனியன்று சனி ஹோரை என ஒவ்வொரு நாளுக்குரிய ஹோரையுடன் ஆரம்பமாகும்.
எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

சூரிய ஹோரை: புதிய தொழில், வியாபாரம் தொடங்க, உத்தியோகம், ஒருவரிடம் உதவி கேட்க, உங்களின் மேல் அதிகாரியை சந்திக்க, உயில் எழுத, வீடு, வாகனம் பதிவு செய்தல், நமக்கான சிபாரிசு, ஆலோசனை கேட்டல், பிற ஆலோசனை என முக்கிய காரணத்திற்கு இந்த சூரிய ஹோரை காலங்களை தேர்ந்தெடுக்கலாம்.

எக்காரணம் கொண்டும் சூரிய ஹோரை நேரத்தில் வீடு குடி போவதை தவிர்ப்பது நன்று.
சந்திர ஹோரை: புதிய தொழில், வியாபாரம் தொடங்க, திருமண விஷயங்களை பேசுதல், வெளிநாடு செல்லுதல் போன்றவற்றிற்குச் சந்திர ஹோரையை தேர்வு செய்வது நல்லது. கிருஷ்ணபட்ச சந்திரனாக இருந்தால், அதாவது தேய்பிறை சந்திரனாக இருந்தால் மேற்குரியவற்றை தவிர்ப்பது நன்று.
செவ்வாய் ஹோரை: செவ்வாய்க் கிழமைகளில் புதிதாக எந்த ஒரு காரியத்தையும் செய்யாமல் இருப்பதே நல்லது. அதனை நாம் யோசனையாக வைத்துக் கொண்டு மற்ற தினங்களில் செயல்படுத்தலாம். மீறி நம் கருத்துக்கள், யோசனைகளை வெளியிட்டால் மிகுந்த துன்பங்களை அனுபவிக்க வேண்டி இருக்கும்.
இதன் காரணமாக தான் செவ்வய் கிழமைகளில் தெய்வ வழிபாடு தவிர மற்ற நலல காரியங்களை தவிர்த்து விடுகின்றனர். நேர்மறை வார்த்தைகளை பேசுதல், கருத்துக்களைத் தெரிவித்தல், கெடுதல் வராமல் தவிர்க்கலாம்.
புதன் ஹோரை: புதன் ஹோரையில் எழுத்து பணிகளுக்கு மிகவும் உரிய காலம். கல்வி கடவுகளாக புதன் பார்க்கப்படுவதால், தேர்வுகள் எழுதினால் வெற்றி கிடைக்கும். எல்லா விதமான ஆராய்ச்சியையும் தொடங்கலாம். தொலை தூர தொடர்புக்கு உகந்த தந்தி, பேக்ஸ் அனுப்புதல், வழக்கறிஞர்களை சந்தித்து பேசுதல், சுப காரியங்கள் குறித்து தாய் வழி உறவினர்களுடம் பேசுவதற்கு உகந்த காலம்.

புதிய நிலம் வாங்குதல், பெண் பார்க்க செல்லுதல், அது தொடர்ப்பான பேச்சு வார்த்தைகளை தவிர்ப்பது நன்று.
குரு ஹோரை: அனைத்து சுப காரியங்களுக்கும் ஏற்றது குரு ஹோரை. திரு மாங்கல்யத்துக்கு தங்கம் வாங்க, ஆடை, ஆபரணம் வாங்க மிக ஏற்ற நேரம் குரு ஹோரை. குரு மிகவும் சுப கிரகம் என்பதால், அந்த நேரத்தில் எது செய்தாலும் அது நல்ல பலனையே தரும். நகை தொடர்பான வேலை, கடை தொடங்க மிக ஏற்ற நேரம்.

விவசாயம் செய்ய, வீடு, மனை வாங்குதல், விற்க என எதை செய்தாலும் உகந்ததாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்திற்கும், விருந்து, விழாக்களுக்கானதும், சாந்தி முகூர்த்தத்திற்கு மிக உகந்த நேரம் இந்த குரு ஹோரை. வீடு, மனை வாங்க விற்கு மிக ஏற்றது.
சுக்கிர ஹோரை: சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம், பெண் பார்த்தல், திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை, விருந்து, விழா, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், புதிய வாகனம், வாங்க சுக்கிர ஹோரை மிக சிறந்தது. இந்த ஹோரையில் ஏதேனும் ஒரு பொருள் காணாமல் போனால், அது மேற்கு திசையில் சில நாட்களிலேயே கிடைத்துவிடும்.

இருப்பினும் இந்த சுக்கிர ஹோரை நேரத்தில் கடன் மட்டும் கொடுக்கக் கூடாது. கடன் வசூலிக்கலாம். மருந்து சாப்பிடலாம்.
சனி ஹோரை : பொதுவாக சனி ஹோரை அசுப ஹோரை என சொல்வார்கள். இதனால் இந்த ஹோரையில் சில காரியங்களுக்கு மட்டுமே சிறப்பான பலன்கள் தரும். கடனை அடைப்பதற்கான நல்ல நேரம் என்றால் சனி ஹோரை தான். சனி ஹோரையில் கடன் திருப்பிக் கொடுக்க வேகமாக கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கா சூழல் உருவாகும்.

மருத்துவமனைக்கு செல்லுதல், அறுவைசிகிச்சை செய்தல், கடன் வாங்குதல் செய்யக் கூடாது. ஏனென்றால் அது தொடரும் என்பது ஐதீகம்.

சுப, அசுப ஹோரைகள்:

குரு சுக்கிரன், சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள் சுப ஹோரைகள் என்றும்,
செவ்வாய், சனி, கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறை சந்திர ஹோரை முதலியன அசுப ஹோரைகள் என கருதப்படுகின்றன.

எந்த நாளில் எந்த ஹோரை சுபம்:

கிழமை ஹோரைகள்
ஞாயிறுசுப ஹோரைகள்:- குரு , சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள்
திங்கள்சுப ஹோரைகள்:- குரு, சுக்கிரன், சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள்
செவ்வாய்சுப ஹோரைகள்:- குரு, சுக்கிரன், சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள்
புதன்சுப ஹோரைகள்:- சுக்கிரன், சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள்
வியாழன்சுப ஹோரைகள்:- குரு, சூரிய மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள்
வெள்ளிசுப ஹோரைகள்:- சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திர ஹோரைகள்
சனிசுப ஹோரைகள்:- குரு, சுக்கிரன் ஹோரைகள்
ஞாயிறு கிழமைகளில் சனி, சுக்கிர ஹோரைகள் பலன் தராது.
திங்கள் கிழமைகளில் சனி ஹோரை பலன் தராது.
செவ்வாய்க் கிழமைகளில் சனி, புதன் ஹோரை பலன் தராது.
புதன் கிழமைகளில் குரு, சந்திர ஹோரை பலன் தராது.
வியாழக் கிழமைகளில் சுக்கிரன், புதன் ஹோரை பலன் தராது.
வெள்ளிக் கிழமைகளில் குரு, சூரிய ஹோரை பலன் தராது.
சனிக்கிழமைகளில் சூரியன், சந்திரன் சனி ஹோரை பலன் தராது.

எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?

Horai in Tamil


காதல் கல்யாண யோகம் கை கூடி வரும் ராசி

ஜோதிட ரீதியாக காதல் திருமணம் வெற்றி பெறுமா?

திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா அல்லது அவர்களின் விருப்பத்தின் பெயரில் நடைபெறும் திருமணமா என்பதை ஜாதகத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ள இயலும். ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கின்ற கிரக நிலைகள் அவர்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களுடைய வாழ்க்கைத் துணையையும் நிர்ணயம் செய்கின்றன.
காதல் திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்களுக்கு பிடித்த ஒருவரை விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உறவாகும். சில நேரங்களில் பெரியோர்களின் சம்மதம் அல்லது அவர்களின் சம்மதம் இன்றியும் மனம் ஒத்த இவர்கள் தங்கள் திருமணத்தை நிகழ்த்திக் கொள்கின்றனர்.
காதல் திருமணம் செய்வோருக்கு பொருத்தம் என்பது வேண்டியதில்லை என்று மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், திருமணத்தில் முதன்மையானது, மனப்பொருத்தமே.

ஜோதிடத்தில் ஒருவருக்கு எழும் எண்ணங்கள் அவருடைய ஜாதகத்தில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து அறிந்து கொள்ளப்படுகின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலிமையான கிரகங்கள் இருந்தாலும் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்து இருந்தாலும் அவர்கள் காதல் புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.

ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகனான சுக்கிரன், ராகு, கேது, சனி இவர்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமும், களத்திர ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் காதலில் விழுந்து திருமணம் புரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

பரணி, பூராடம், ஆயில்யம் ஆகிய நட்சத்திர சாரத்தில் லக்கினங்கள் அமைந்திருந்தால், அவர்களுக்கு காதல் உணர்வு வெளிப்படும்.

காதல் திருமண அமைப்பு எப்படி இருக்கும்?

உங்கள் ஜாதகத்தில் உள்ள 5ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 7ம் இடத்தில் இருந்தாலோ, 7ம் வீட்டு அதிபதி உங்கள் ஜாதகத்தில் 5ம் இடத்தில் இருந்தாலோ, அல்லது இருவரும் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பதாலும் காதல் அமைப்பு இருக்கும்.
ரிஷப ராசிக்கு 5ம் வீட்டு பதிபதியான புதன் 8ம் வீடான விருச்சிகத்தில் இருந்தாலோ,

ரிஷபத்திற்கு 7ம் அதிபதியான செவ்வாய் கன்னியில் அமர்ந்திருக்க வேண்டும்

அல்லது புதன் உங்கள் லக்கினத்திற்கு 3ம் வீட்டு அதிபதியும் ஒன்றாக சேர்ந்து உங்களின் 7ம் அதிபதி வீட்டில் அல்லது நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
கும்ப லக்கினம் சூரியன் மிதுனத்தில் அமர்ந்து புதனும் சனியும் 11ஆம் வீட்டில் இருந்து பார்த்தாலோ காதல் திருமணம் நடக்கும்.

அல்லது கும்ப லக்கினம் புதன் செவ்வாய் ஒன்று சேர்ந்து அவர்களை சுக்கிரன் பார்த்தாலோ

அல்லது கும்ப லக்கினம் புதன் சிம்மத்தில் பூரம் நட்சத்திர சாரத்தில் நின்றாலோ

12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான திருமண பொருத்தம்

ஆணின் ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்வது சுக்கிரன் ஆவார். அதேபோலவே பெண்ணின் ஜாதகத்தில் திருமணத்தை நிர்ணயம் செய்வது செவ்வாய் ஆவார். அவர் ராகு, கேது மற்றும் சனியினால் பாதிக்கப்படும் பட்சத்தில் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.

காதல் என்பது இரு மனங்கள் ஒன்றிணைந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் உன்னதமான உறவாகும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் இந்த உறவினை பயன்படுத்தி பல தவறான நிகழ்வுகளும், இழப்புகளும் உருவாகின்றன.

எனவே, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் காதல் எண்ணங்கள் ஒருவர் மீது ஏற்படும்போது காதலிக்கும் நபரானது தமக்கான முழு பாதுகாப்பையும், புரிதலையும் அளிக்கும் பட்சத்தில் அது காதலாக உருமாற்றம் அடைத்து வெற்றியை நோக்கி பயணத்தை மேற்கொள்ளும்.

காதல் என்பது எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை மட்டும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு உன்னதமான உணர்வாகும். பருவ வயதில் ஏற்படும் காதலை காட்டிலும், நடுத்தர வயதில் தனது துணைவருடன் ஏற்படும் காதலானது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீண்ட நெடிய பயணத்தை கூட சிறு தூரம் பயணம் போன்று கடக்க வைக்கும்.



பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை

The World's largest Nataraja statue made from 'Ashtadhatu'

The World's largest Nataraja statue made from 'Ashtadhatu' (eight metals) has been installed in front of Bharat Mandapam, which is the venue for the G20 summit in the national capital.
The 27 feet tall, 18-ton-weight statue is the tallest statue made of Ashtadhatu and is sculpted by the renowned sculptor Radhakrishnan Sthapaty of Swami Malai in Tamil Nadu and his team in a record 7 months.
The statue was transported to the national capital in four days and a special green corridor was created for its transportation.
புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9,10ம் தேதி நடைபெற உள்ள ஜி-20 மாநாடு அரங்கத்தின் முகப்பில், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருக்கும் நடராஜர் மற்றும் கோனேரிராஜபுரம் விக்ரகங்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட மிகவும் பழைமையான வடிவிலானவை. அதேபோன்று முயலவன் மீது ஆனந்த தாண்டவம் ஆடும் வடிவிலான நடராஜர் திருமேனியை வடிவமைக்க வரதராஜன் முடிவு செய்தார். உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையாகத்தான் வடிவமைக்கும் சிலை இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்.
வேலுார் நாராயண சக்தி பீடத்தின் ஒத்துழைப்போடு நடராஜர் சிலை வடிவமைப்பதற்கான பணிகளை வரதராஜன் தொடங்கினார். கடும்முயற்சியின் பலனாக ரூ 4 கோடி மதிப்பில் நடராஜர் சிலையினைச் செய்து முடித்துள்ளார் வரதராஜன்.


CIBIL Score Status Online

What is a CIBIL credit report?

Credit Information Bureau (India) Limited, commonly known as CIBIL, is India’s first Credit Information Company or Credit Bureau. It maintains records of all credit-related activity of individuals and companies including loans and credit cards. The records are submitted to CIBIL by registered member banks and other financial institutions on a periodic (usually monthly) basis. Based on this data, CIBIL issues a Credit Information Report or CIR (commonly referred to as a credit report) and a credit score.

CIBIL collects and maintains records of the credit-related transactions of individuals as reported by their lenders (whether banks, NBFCs or credit card companies). This information could include details of all loan and credit card repayments including any late or missed payments; details of enquires made by lenders on loan or credit card applications made in the past; all current loans and credit cards; total credit limit; and other such credit-related information.

Your CIBIL TransUnion Score ranges between 300 and 900.
79% of the loans approved are for individuals with a score greater than 750.
Higher your CIBIL TransUnion Score, higher are your chances of Loan Approval.

A good credit score of 750 or above will enable you to avail of:


1. Low interest rate
2. Higher loan amount
3. Longer tenure
4. Quicker approval process
5. Higher credit limit on your card

PLANNING TO APPLY FOR A LOAN OR CREDIT CARD ANYTIME SOON; CHECK YOUR CREDIT SCORE FIRST!

Cibil Score Apply Online
Cibil score Report

Apply for Company Credit Report from TransUnion CIBIL Limited (Formerly: Credit Information Bureau (India) Limited). (CIBIL)

Credit Report Apply Online
Credit Report

CIBIL FAQ

Understanding CIBIL: Functions, Product And Services, Download CIBIL FAQ

Download CIBIL Brochure


Related Links...

Godown ID cannot be null, Correcting Smart Card details in TNPDS site


Vanitha Wedding Viral Video,Peter Vanitha Marriage Video


Free Local Business Listing Sites


Indian Railways starts 200 special trains from 1/6/2020


திருமணத்தில் கவனிக்க வேண்டிய பொருத்தங்கள்


திருமண நட்சத்திர பொருத்தம்


CSK VS RCB, IPL 2021,Twenty-20


Coronavirus Delta Variant


Microsoft Global outage, What is CrowdStrike issue


SIR -2026 DRAFT SEARCH, SEARCH YOUR NAME OR EPIC NUMBER


Explore All popular Cat and Kitten Breeds, specification and health et


Most Popular Dog Breeds,pictures and Breeds information


Pay Your Coimbatore Property Tax Online


Inian Lunar Rover Pragyaan takes a walk on the MOON


IPL 2021 Cricket Match Full Schedule


Jana Nayagan – Thalapathy Kacheri Lyric Video


Horai in tamil, எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?


Today Coimbatore Gold and Silver Rate


Jana Nayagan Oru Pere Varalaaru Lyrical Video


Train No. 06421/06422 Coimbatore – Pollachi – Coimbatore Daily train


Lemsip Max Cold & Flu Lemon, 10 Sachets


EKYC JIO SIM Activation Process Using Aadhar Card


SIR - Coimbatore booth list 2002,Name Search in Electoral Rolls


Nov 26 - PSLV C54,ISRO to launch Oceansat-3,8 nano satellites


Pragyan rolling down to lunar surface from lander,ISRO Video


Keto Diet: What is a Ketogenic Diet?


Photo : Vikram Lander on the moon's surface, Moon rover Pragyaan snap


Latest News on Coimbatore Metro 2023


TOP 25 Indian Universities Ranking 2022-23


Coimbatore Property Tax Online Payment


CAR INSURANCE, Buy & Renew Car Insurance Online,Upto 75%* Off


Watch Free Movies Online, Best Free Movie Streaming Sites


James Webb Space Telescope - First Image NASA


ஓமிக்ரோன் கொரோனா new COVID-19 variant (B.1.1.529) SARS-CoV-2


ஓமிக்ரானை கட்டுப்படுத்த ஆஸ்ட்ராஜெனெகா பூஸ்டர் டோஸ்


FirstCry India - Baby & Kids Shopping & Parenting


India Vs Ireland 2nd T20 Match Highlights,Deepak Hooda Century, SanjuS


Pragyan rolling down to lunar surface from lander, ISRO video


தமிழ் குழந்தை பெயர்கள் 2020